பாரதி
பாரதி
— தீபிகா சுரேஷ்
பாரதி என
நாவசையாமல்
சொல்லிப் பார்க்கும்போதே
வீரத்தின்
குதிரைக் குளம்படிகள்
என்னுள்…
பாப்பாக்களை
விளையாடச் சொன்னாய்
பராசக்தியையும்
திகைக்கச்செய்தாய்
உனது புதுக்கவிதைகளில்
புளங்கிதம் கொண்டது
பெண்ணியம்…
உன் நினைவு நாளாமே!!!
எச்சூழலிம் கலங்காமல் தன்னம்பிக்கையோடு
தலைநிமிர்ந்து
நடப்பதைத் தவிர
எப்படி சிறப்பாக
அஞ்சலி
செலுத்திட முடியும்
உனக்கு
என் உண்மைக் கவிஞனே….
Tags: பாரதி