நீயும் நீயும் நானாவேன்..

Vinkmag ad
நீயும் நீயும் நானாவேன்.. (கவிதை) வித்யாசாகர்!
1
கிழித்துப்போட்ட
காகிதங்களைப் போல கிடக்கிறது
உனக்காக காத்திருந்த மனசு;

அள்ளி தீயிலிட நினைக்கிறேன்
நீயில்லா தனிமைதனில்…

——————————————————-
2
நீ நிலவிற்கீடு
ஒரு படி அதற்கும் மேல்..


எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டே யிருப்பாய்

நானந்த ஒளியின்
ஏதேனுமொரு மூலையில் நின்று
உனைத் தொட்டவாறே உயிர்த்திருப்பேன்..
——————————————————-
 
3
யிரைவிட
எதைப் பெரிதாகச்
சொல்வதென்று புரியவில்லை;

உன்னைவிட எனலாமா..?!!

——————————————————- 
 
4
ழையின்று சோவெனப்
பெய்யுமென்றுச் சொன்னால்
ஒரு விவசாயிக்கு மனசெல்லாம் பல்லாய்
சிரிப்பு வரும்;

எனக்கும் நீ இன்று
வருவாயென்று நினைக்கையில்
நினைக்க நினைக்க ஆனந்தம்..

——————————————————-
 
5
ந்தப் பிரபஞ்சம்
காற்றால் நிறைந்திருப்பதைப் போலத்தான்
நானும் உன்னால் நிறைந்திருக்கிறேன்..
 
என்னுலகம்
உன்னிலிருந்து துவங்கி
உன்னோடே முடிகிறது..

News

Read Previous

போலி அறிவியல்

Read Next

ஒக்கூர் மாசாத்தியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *