நிலவுடன் ஒரு நொடி உரை

Vinkmag ad

நிலவுடன் ஒரு நொடி உரை
=========================

IMG_103873204981888வெண் நிலவே
விடை ஒன்று நீ
கூறு வெளிப்பான
உன் உடலுக்கு உடை
ஒன்று எங்கே உண்டோ….\
நீ உலா  வரும்

காளையர் கண்
கவரும் கண்ணி
அல்லவோ……\

உடை ஒன்று
இல்லாமல்
உலா வருவதில்
ஞாயம் என்னவோ….\

உன்  கட்டழகில்
மயங்கி ஒட்டிக் கொள்ள
இயலாமல்  துக்க தினம்
அனுஷ்ரிக்கின்றதோ
மேகம் கரும் உடை உடுத்தி…\

நானும் ஓர் கன்னியெடி
நாணம் கொண்ட
மங்கையடி………..\

வாடைக்காற்றும்
சிலு சிலுக்குதடி
பல மலர்களின்
வாசணையையும்
அழைத்து வருகின்றதடி…..\

வாக்கப்பட்டு நான்
போகப் போகும் நாட்டுக்கு
நீ வருவாயோ வெண்நிலவே…\

மன்னவன் மார்வினிலே
நான் சாய்ந்து முழு மதியக
இருக்கையிலே மறந்தும்
நீ வந்து விடாதே
அந்தப்புரப்பக்கமாக……\

வெட்கம் கொண்டு
நான் எழுந்து விடுவேன்
ஏக்கம் கொண்டு அவர்
அமந்து விடுவார்……..\

அன்று ஒரு  நாள்
உனக்கு நிகராய்
நானாவேன்….\

ஆடை அகற்றிய அழகி நீ
ஆடை உடுத்திய அழகி நான்
அழகுக்கு அழகு கொடுப்பது
ஆடையடி அம்மணமாக நீ
வருவதும்  ஏனோடி……\

நீயும் உடுத்திக்கோ மேகத்தை
போர்த்திக்கோ  நீல வானத்தை
அணிந்து கொள் நட்சத்திரத்தை
சூடிக் கொள் வானவில்லை
முகம் பார் பனித் துளியில்
மயங்கியே விடுவாய் உன் அழகில்
வெண்நிலவே இந்தப் பெண் நிலா
கூறுவதை கேள் நிலாவே…..\
வேளையிலே

 

News

Read Previous

பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணங்கள்

Read Next

முதுவை சாதிக்கின் சகோதரி மாமனார் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.