நட்சத்திர மீன்கள்
நட்சத்திர மீன்கள்
எண்ணில் அடங்கா தூரத்தில் விண்மீன்கள்
கண்ணில் பட்டுத் தெரிக்கும் வைர
பூக்கள்
இருந்து ஒளிர்ந்தால் வழியைச்
சொல்லும்
எரிந்து விழுந்தால் விழியை
வாங்கும்
விண்ணில் ஒளி தர இரண்டு உண்டு
என்னில் ஏன் இல்லை அந்த ஒன்று
வானிற்கு வழங்கிய வல்லவனே
ஏன் எனக்கு மறுத்தாய் ஏகவனே
கண்ணீரோடு கேட்டது கடல்
கடலே கடலே கவலை கொள்ளாய்
கலை நயத்தோடு ஒன்று தருவேன்
கடவுள் சொன்னான் கருணையோடு
அலைகடல் கேட்டதுஅமைதியோடு
நிலத்திலும் நீரிலும் வாழும் ஒன்று
நீலவானில் எரிந்து சாகும் ஒன்று
வடிவினை ஒன்றாய் அமைத்தவன்
வாழ்வியல் இரண்டாய் வடித்தான்
உயிரினம் என்றொன்று இருந்தால்
உருவமைப்பு என்றொன்று உண்டு
வாய் எங்கே வயிறு எங்கே இதற்கு
வாழ்வதும் கடினம் தான் அதற்கு
ஆயிரம் மயிரிழை தான் கால்களோ
ஆயினும் கைகள் தான் வீல்களோ
அசைந்து செல்லும் அழகே அழகு
இசைந்து வாழ உலகில் பழகு
விண்மீன் எரிந்தால் எரிகற்கள்
இம்மீன் இறந்தால் இளம் பூக்கள்
எதிலும் இணையா இரு துருவம் படைத்தது மட்டும் ஒரே உருவம்
நட்சத்திர மீன் நீ என்றால்
நடுவானில் ஒளிற வேண்டும்
திரைவானில் மிளிர வேண்டும் நீயோ
சுடுமண்ணில் தானே உழல்கின்றாய்
உன்னை உணவாய் உண்ண
எம்மைத் தடுத்த இறையை வணங்கி
இம்மையில் ஏற்றம் கொள்வாய்
மறுமைதான் உனக்கு இல்லையே
எம் எம் முஹம்மது யூசுப். உடன்குடி