நடந்தாய் வாழி காவேரி !

Vinkmag ad
ஆடிப்பெருக்கு   வாழ்த்துகள்  
 
 
பி. சுசீலா  குரலில்  – https://www.youtube.com/watch?v=naotrkzMOqw
கே. ஜே. யேசுதாஸ்  குரலில் –  https://www.youtube.com/watch?v=nwVYnuof_98
 
பாடல் : இளங்கோ அடிகள்
இசை : சலீல் சௌத்ரி
படம்: கரும்பு (1973)
 
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !
 
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !
 
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !
 
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !
 
உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
நடந்தாய் வாழி காவேரி !
 
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி !

News

Read Previous

பக்ரீத் வாழ்த்துக்கள்

Read Next

சுஜாதாவின் அக முக வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *