தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு

Vinkmag ad

ஊரை இணைக்கும் கோடுகளே
ஊரைப் பிரிக்கும் கேடுகளானது
 
வேற்றுமைத் தீயால்
வெந்து மடிகின்றோம்
வாஞ்சை வாளியால்
அன்பு நீரெடுத்து
வாரி அணைப்போம்
சிரட்டை அளவேனும்
சிரத்தை நினைப்போம்
 
கூட்டமைப்பு என்னும்
கூடாரம் அமைத்தோம்
ஓட்டுக்காகப் பிளக்கும்
வேட்டமைப்புகளை
வெளியில் நிறுத்துவோம்
 
உளத்தூய்மைப் பற்றினால்
உருவாகும் ஒற்றுமை
கத்தியில் நட்ப்பது போல்
பத்திரமாகவும்; கண்ணாடிப்
பாத்திரமாகவும் பக்குவமாய்க்
கோத்திரப் பெருமையின்றி
பழகுவோம்
 
எதிர்மறை எண்ணங்களின்
புதிர்களால் புறம்பேசுவதைப்
புறந்தள்ளுவோம்
 
அண்டைத் தெருவோடு
அன்பை மறந்தால்
அரவணைக்க ஆளின்றி
அடுத்துவரும் பெருங்கேடு
 
சமத்துவ மரத்தைச்
சாய்ப்பதற்குச் சாத்தானின் கைகளில்
சுயநலக் கோடாரி
சந்தித்துச் சொல்வோம்
சகோதரர்களின் வீடேறி
”எல்லா வீதிகளும் ஒன்றே”
இனியொரு விதி செய்வோம் நன்றே”
 
 
 
 
 
 

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

News

Read Previous

துளிப்பாக்​கள் (ஹைக்கூ)

Read Next

கவிதை : லால்பேட்டை மௌலவி அன்சாரி

Leave a Reply

Your email address will not be published.