துணிவு
துணிவு
கள்ளக் காதல் துணிவல்ல.
துணிந்து செய்வதெல்லாம் துணிவல்ல – எண்ணித்
துணிந்து செய்வதே அறிவாகும்
துணிந்தபின் எண்ணுவது இழுக்காகும்.
வள்ளுவன் கூறிய வாக்காகும் – அதை
உள்ளத்தில் வைப்பது உயர்வாகும் .
காதலிப்பது துணிவாகும் .
காதலை மறைத்து கல்யாணத்திற்கு முன் நாள் ,
ஓடிப்போவது துணி வல்ல.
ஓடிப்போவது துணி வல்ல.
தடைகளைத் தகர்த்து தன்னம்பிக்கையோடு
வெற்றி கொள்வதே துணிவாகும் .
வெற்றி கொள்வதே துணிவாகும் .
தடைகளை நினைந்து , தோல்விக்கு பயந்து
தற்கொலை செய்வது துணிவல்ல .
தெரிந்தவரையில் , புரிந்த வரையில்
தேர்வை எழுதுதல் துணிவாகும்
துண்டுச் சீட்டின் துணையைக்கொண்டு
தேர்வை எழுதுதல் துணிவல்ல .
நேர்மையால் , திறமையால் நம்பிக்கை கவர்ந்து
தேர்தலில் வெல்வது துணிவாகும்.
கள்ள ஓட்டாலும் ,காசு பணத்தாலும்
தேர்தலில் வெல்வது துணிவல்ல.
தன்வலி கொண்டு தைரியமாக
போரில் வெல்வது துணிவாகும் .
வஞ்சகத்தாலும் , சூழ்ச்சிகளாலும்
போரில் வெல்வது துணிவல்ல .
தரம் குறையாமல் , செலவுகள் குறைத்து
விலையைக் குறைத்து , விற்பனை செய்து
சந்தையில் போட்டியை சாகசத்தாலே
முந்திச் செல்வது துணிவாகும்.
முந்திச் செல்வது துணிவாகும்.
தரத்தைக் குறைத்தும் ,கலப்படம் செய்தும்
அளவைக்குறைத்தும் , பொய்களுரைத்தும்
ஏமாற்றியும் லாபம் பெருக்க
தொழிலைச் செய்வது துணிவல்ல.
தன் அறிவாலே , தன் உழைப்பாலே ,
தன் முயற்ச்சியாலே , தன்னம்பிக்கையாலே
தனக்குரியதை மட்டும் பெற்று
தன் அறிவாலே , தன் உழைப்பாலே ,
தன் முயற்ச்சியாலே , தன்னம்பிக்கையாலே
தனக்குரியதை மட்டும் பெற்று
தரமாய் வாழ்வதே துணிவாகும்
கள்ளக் காதல் துணிவல்ல.
கள்ளச் சந்தை துணிவல்ல.
கள்ளத்தனமும் துணி வல்ல.
கள்ளப் புகழும் துணி வல்ல.
எழுதவும் துணிவு வேண்டும் – அதை
ஏற்றுக்கொள்ளவும் துணிவு வேண்டும்
துணிவுடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
Tags: துணிவு