தீன் மணக்கும் திசை……..

Vinkmag ad

தீன் மணக்கும் திசையெல்லாம் தேடினேன் உம்மை
திருமறையின் வரிகளிலே அலைய விட்டேன் கண்ணை
காரிருளைக் கிழித்துக் கதிரவனாய் வந்த நபியே
பேரருளாய் பாரில் வந்த ஓரிறையின் உயர் நபியே
ஓரிறையின் உயர் நபியே
எங்கே சென்றீர் எங்கே சென்றீர் எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றீர்-2
ஏந்தல் நபி நாயகமே எங்கே சென்றீர்-2
எங்கே சென்றீர் எங்கே சென்றீர் எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றீர்
ஏந்தல் நபி நாயகமே எங்கே சென்றீர்
இசையாற்றல் தனை பெற்ற தாவூத் நபி
எறும்பும் உரை சொன்ன சுலைமான் நபி
என்றாலும் இவையாவும் இனையாகுமா
எங்கள் நபி நாதர் மிஃராஜு மேலாகுமா
எங்கே சென்றீர்)
செங்கோலும் சொல் கேட்ட மூஸா நபி
செந்தொழு நோயும் நீக்கிட்ட ஈஸா நபி
இருந்தாலும் இறைத் தூதர் மஹ்மூதரின் மறை ஞானப் பேற்றுக்கு ஈடாகுமா
(எங்கே சென்றீர்)
மெட்டு-தமிழ் மணக்கும் திசையெல்லாம்….
ஆக்கம்&பாடல்-பாலப்பா எவுனி

News

Read Previous

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்

Read Next

”நிதானத்தை இழக்காதீர்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *