திறக்காதீர் மதுக்கடைகளை !

Vinkmag ad

திறக்காதீர் மதுக்கடைகளை !

கவிஞர் இரா .இரவி !

மூடிய மதுக்கடைகள் மூடியபடியே இருக்கட்டும்
மூடிய மதுக்கடைகளைத் திறந்தால் இன்னல் வரும் !

குடி நோயாளிகள் எல்லாம் குடியை மறந்து இன்று
கண்ணியமாக நல்லோராய் வாழ்ந்து வருகின்றனர் !

குடும்பங்கள் குடித் தொல்லையின்றி இப்போது
கவலையின்றி மகிழ்வாய் வாழ்ந்து வருகின்றனர் !

காந்தியடிகள் வெறுத்திட்ட குடியை வெறுப்போம்
குடிமகன்கள் மீண்டும் கெட வழி வகுக்காதீர் !

அரசாங்கத்திற்கு வருமானம் வருவதற்கோ
ஆயிரம் வழிகள் உண்டு சிந்தித்து அறிந்திடுவீர் !

குடியால் வருகின்ற வருமானம் அனைத்தும்
குடிமகன்களுக்கும் குடிமக்களுக்கும் கேடு தரும் !

குற்றங்கள் அனைத்திற்கும் காரணி குடிபழக்கமே
குற்றங்கள் நடக்கவில்லை நாற்பது நாட்களாய் !

மாணவர்களும் சில பெண்களும் அடிமையாகி இருந்தனர்
மனம் திருந்தி விட்டனர் மாறி விட்டனர் திறக்காதீர் !

மதுக்கடைகளைத் திறந்தால் நாட்டில் மீண்டும்
மடையர்கள் மலிந்து குற்றங்கள் பெருகி விடும் !

கொரோனா பரப்பிடமாக மாறிவிடும் மதுக்கடைகள்
குடிமகன்கள் கொரோனா பரப்பிடும் தூதர் ஆவர்கள் !

சிந்தித்துப் பார்த்து தவறான முடிவினை மாற்றுங்கள்
சிறிது மதிப்பு தங்களுக்கு வேண்டுமென்றால் திறக்காதீர் !

News

Read Previous

பறவைகளே …….

Read Next

பகைமை மறப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *