பறவைகளே …….

Vinkmag ad

பறவைகளே …….

 

 

திருவை அப்துர் ரஹ்மான்

 

 

 

உணர்வுகளில்

என் அகவுணர்வுகளில்

எப்போதுமே அந்த

அபாபீல் பறவைகளின் ஆர்ப்பரிப்பு !

 

 

அலம்தற கைஃப்

வசனங்களைப் பார்க்கிறேன்

கேட்கிறேன் அவை

எதிரொலிகளாய்

எண்ண அலைகளாய் !

 

 

எனக்குள் நானே

திரும்பத் திரும்பச்

சொல்லிப் பார்க்கிறேன்

என்னைக்

கிள்ளிப் பார்க்கிறேன் !

 

அப்ரஹாவின் யானைப்படை

என்னவாயிற்று !

மெல்லப்பட்ட வைக்கோலாய்

குப்பையாய் கூள்மாய் !

 

 

இன்றைய உலகம்

நாகரிகத்தின் நிழற்குடை

கலாச்சாரங்க்ளின் காவியம்

கண்ணாகும் கல்வியைக்

காத்திடும் இமைகள் !

இங்கு தான் ….

 

 

சத்தியத்தை மறந்ததால்

சாபக் கேடுகள் !

அசத்தியம் வென்றதால்

அராஜகம் !

இனவெறியால் இரத்த ஆறு !

 

 

அதோ ….  அந்த

மலைகளின் அடி வாரங்களில்

இறுகிப் போன பாறைகளின்

கீறல்விழுந்த வெடிப்புகளில்

மண்மேடுகளில் …….

 

எங்கும்…… எங்குமே

மழலைகளின் அழுகுரல் !

அபலைகளின் கண்ணீர் !

 

பறைவைகளே…. ஓ….

அபாபீல் பறவைகளே !

என்

செவிப் பறைகளில் எப்போதுமே

உங்களின் ஆர்ப்பரிப்பு

சிறகடிக்கும் சலசலப்பு !

 

 

நன்றி

குர்ஆனின் குரல்  மாத இதழ்

ஏப்ரல் 2016

 

 

 

 

 

 

News

Read Previous

உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்…

Read Next

திறக்காதீர் மதுக்கடைகளை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *