பறவைகளே …….
பறவைகளே …….
திருவை அப்துர் ரஹ்மான்
உணர்வுகளில்
என் அகவுணர்வுகளில்
எப்போதுமே அந்த
அபாபீல் பறவைகளின் ஆர்ப்பரிப்பு !
அலம்தற கைஃப்
வசனங்களைப் பார்க்கிறேன்
கேட்கிறேன் அவை
எதிரொலிகளாய்
எண்ண அலைகளாய் !
எனக்குள் நானே
திரும்பத் திரும்பச்
சொல்லிப் பார்க்கிறேன்
என்னைக்
கிள்ளிப் பார்க்கிறேன் !
அப்ரஹாவின் யானைப்படை
என்னவாயிற்று !
மெல்லப்பட்ட வைக்கோலாய்
குப்பையாய் கூள்மாய் !
இன்றைய உலகம்
நாகரிகத்தின் நிழற்குடை
கலாச்சாரங்க்ளின் காவியம்
கண்ணாகும் கல்வியைக்
காத்திடும் இமைகள் !
இங்கு தான் ….
சத்தியத்தை மறந்ததால்
சாபக் கேடுகள் !
அசத்தியம் வென்றதால்
அராஜகம் !
இனவெறியால் இரத்த ஆறு !
அதோ …. அந்த
மலைகளின் அடி வாரங்களில்
இறுகிப் போன பாறைகளின்
கீறல்விழுந்த வெடிப்புகளில்
மண்மேடுகளில் …….
எங்கும்…… எங்குமே
மழலைகளின் அழுகுரல் !
அபலைகளின் கண்ணீர் !
பறைவைகளே…. ஓ….
அபாபீல் பறவைகளே !
என்
செவிப் பறைகளில் எப்போதுமே
உங்களின் ஆர்ப்பரிப்பு
சிறகடிக்கும் சலசலப்பு !
நன்றி
குர்ஆனின் குரல் மாத இதழ்
ஏப்ரல் 2016