திருநெல்லை பதிகம்

Vinkmag ad

திருநெல்லை  பதிகம்


நீடாழி  சூழ்உலவில்  நிலையான  தெய்வமே!

                 நிகரிலாத் தெய்வம் நீயே

நிலையாத பொருள்எல்லாம் நிலையென்று நம்பியே

                 நிற்கின்ற  மாந்தர்  எல்லாம்

கூடாத  வழியினில் ஆடாத ஆட்டங்கள்

                 கொஞ்சமா போடு கின்றார் 

குறையாத  பக்தியில் நிறைவாக வாழவே

                  கொஞ்சமும்  எண்ண வில்லை

மாடாக மாறினார்  மயங்கியே நிற்கிறார்

                 மக்களாய் வாழ லில்லை

மதியாத  இவர்களை  மதித்ததால்  வாழ்க்கையில்

                 மகிழ்ச்சிநாம்  கண்ட தில்லை

வாடாத  சோலைவாழ்  திருநெல்லை  அம்மையே!

                  வாவென்று அழைக்கி  றோமே     

வருகநீ  திரிபுவனை  வையகம்  வாழவே

                  வந்தருள்  புரிகுவாயே


காப்பியக் கவிஞர் -நற்றமிழ் நாவலர்.நா.மீனவன்

News

Read Previous

மரணக் குழியாகும் கழிவுக் குழி

Read Next

தோள்பட்டை வலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *