திரியே …. மெழுகு திரியே …!

Vinkmag ad

 

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

அழைக்க : 99763 72229

திரியே ! திரியே ! தீரும் வரைக்கும்

தீயில் எரிகின்றாய் ! – எங்கள்

திசையை எல்லாம் வெளிச்சமாக்கி

நீயும் கரைகின்றாய் !

 

கரையும் பொழுது பெருகும் வலியை

யாரிடம் சொல்கின்றாய்? – உன்

கண்ணீர் சத்தம் கேட்கிறதே ! என்

கனவைக் கலைக்கின்றாய்..!

 

உருகத் தெரிந்த உனக்கு நன்மை

உணர்த்தத் தெரிகிறது ! – இந்த

உதவாக்கரை மாந்தருக்கோ – பிறரைக்

கொளுத்தத் தெரிகிறது !

News

Read Previous

ஆறறிவுகளின் ஆராய்ச்சி ! – திருக்குறள் சாயபு –

Read Next

தமிழகத்தில் இஸ்லாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *