தாயில்லாமல் நானில்லை !

Vinkmag ad

 

தாயில்லாமல் நானில்லை !

கவிஞர் சீர்காழி இறையன்பனார்

 

தாயிற் சிறந்ததொரு உலகமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை;

தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு

தாயன்புப் பெறுவதில் மகிழ்ச்சியுண்டு !

 

 

 

தாயே, உன்னைப் பெற்ற அன்பு அன்னை !

தாகத்தை நீக்குவதில் உயர்ந்த தென்னை !

சோகத்தைக் கண்டால் கண்ணீர் விடுவாள்

சுகத்தினை வேண்டி இறைவனைத் தொழுவாள் !

 

 

 

சீர்பெறும் கருணையால் தினமும் சிறப்புறுவாள் !

சிந்தைக்கு வழிவிட்டு தாள் திறப்பாள்;

பேர் பெருகும் சபையினிலே உனை வைப்பாள் !

பார் புகழும் பாராட்டில் உனை நனைப்பாள் !

 

 

 

பசி தீர்த்துப் பட்டினியை அவள் போக்குவாள்

பாசத்தால் உச்சிமுகர்ந்து உவகை பெறுவாள்;

அழகு செறியும் வாயினிலே கலிமா சொல்வாள் !

பழகும் உறவின் பாசத்திலே பண்பு காட்டுவாள் !

 

 

 

பேணுகின்ற இறைவழியில் பிழைத் தேடுவாள்

நாளும் அறிய நற்கல்வியை அவள் தருவாள்

நாடறிய உன்னை நல்வழியில் நடத்துவாள் !

 

 

அன்றலர்ந்த மல்லிகையின் இதழைப்போல

அகம் திறந்து முகமலர்ந்து சிறந்திடுவாள்;

தன் அன்னை உண்ணவும், உறங்கிடவும்

உளம் தந்து நலம் பேணி மகள் வாழ்வாள் !

 

 

நன்றி : நர்கிஸ் –  மே 2012

News

Read Previous

மாநபி (ஸல்) வழியே … நடப்போம் ..!

Read Next

கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி 2013

Leave a Reply

Your email address will not be published.