தலைவாரிப் பூச்சூடி உன்னை…

Vinkmag ad

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!

சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்?

விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? – நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் – கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!

கடிகாரம் ஓடுமுன் ஓடு! – என்
கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு.

கடிதாய் இருக்குமிப் போது! – கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!

கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு – பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!

-பாரதிதாசன்

http://nidurseasons.blogspot.com/?psinvite=ALRopfVtynQZ7EVWONkXTjGDY0tSQPwmU99QJE1YuFscqJRVoSnovDA-2ejKhJMLByzZnEOXFX9VQ8duYJS-HyC2GitpG-0UCg

News

Read Previous

ஜ‌ன‌வரி 16, அப‌ர‌ஞ்சி ஆசிரியை துபாய் வ‌ருகை

Read Next

முகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *