தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
தசை வளர்க்கும்
கரும்பென இனிமை தரும் இனிப்பு
நரம்பினை பலப்படுத்தும்
வேம்பென அழிவு தரும்
கசப்பு
கொழுப்பினைக் கொடுக்கும்
மாவென தாகம் தரும்
புளிப்பு
எலும்பு வளர்க்கும்
மிளகெனப் பசி தரும்
கார்ப்பு
உமிழ்நீர் சுரக்கும்
கீரையென ஞாபகம் தரும்
உவர்ப்பு
இரத்தம் பெருக்கும்
அத்தியென சக்தி தரும்
துவர்ப்பு
தையோ சித்திரையோ
மலரட்டும் பொன்னாண்டு
மணக்கட்டும் தமிழ்ப்புத்தாண்டு!!! 💐
அன்புடன்
மீனாகுமாரி பத்மநாதன்
Tags: தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து