தன்னம்பிக்கை

Vinkmag ad

தன்னம்பிக்கை

 

முள்ளுக்கும் உயிருண்டு

நீரின்றியும் வாழ்வுண்டு

அரணாக ஆயிரமுட்கள்

மத்தியில் மலரும்

மலரென்ற அதிசயம்.

 

எவ்விடத்திலும் நான்

வேரூன்றி வளர்வேன்

முட்கள் நிறைந்த

தேகத்தின் பலம்

நம்பிக்கையை விதைக்கும்.

 

உன்னைத் தடுக்க

ஆயிரம் தடைகள்

தடைகளுக்கு அஞ்சினால்

உனது இலக்குகளை-

நீ வெல்வது எப்போது.

 

 

அழகிய மலர்கள்

ஆயிரம் பூக்கும்

திசை மாறிவிடாதே

உனது கனவுகளுக்கு

எல்லையென்பது கிடையாது.

 

 

மலர்ந்த அன்றே

வீழ்ந்து மடிய

நீயொன்றும் மலரல்ல

என்னைப் போன்றே

நீயும் கள்ளிச்செடி.

 

முட்கள் என்பது

வேதனையல்ல நம்பிக்கை

உண்மையில் இவ்வுலகில்

சாகாவரம் பெற்றவன்

நானொருவன் மட்டுமே.

 

இது கவிதையல்ல

நம்பிக்கை நிறைந்த-

ஒரு கள்ளிச்செடியின்

போதனை.

 

இறைவன் படைப்பில்

அனைத்திற்கும் பொருளுண்டு.

 

19bcomcamanikandann@skacas.ac.in

News

Read Previous

மூமின் மேட்ரிமோனி

Read Next

அலிகர் முஸ்லிம் பல்கலை

Leave a Reply

Your email address will not be published.