தன்னம்பிக்கை

Vinkmag ad

தன்னம்பிக்கைக் கவிதை

முடியுமென்ற நம்பிக்கை
முதற்கண் இதன் படி
கடினபாறையைக்
கடந்தது இந்தச் செடி

வீரியத்துடன் எழும்பும்
விதையே ஆலமரம்;
காரியத்தில் தன்னம்பிக்கை
கற்று தரும் போதிமரம்…!

மானமிகு மனிதனுக்குள்
மண்டியுள்ள நம்பிக்கை;
ஆனதினால் சோம்பலற்ற
ஆற்றலிற்றான் வாழ்க்கை…!!!!!

எப்படிப் புரண்டாய்?
எப்படித் தவழ்ந்தாய்?
எப்படி நின்றாய்?
எப்படி நடந்தாய்?
அப்படிமுயல்வாய்
ஆயுள் முழுவதுமாய்

உந்துசக்தி நிரம்பியுள்ள
உனக்குள் திறமைதான்;
நொந்துநீயே கழிப்பதால்
நோயுடனே வறுமைதான்!!!!!

ஒவ்வொரு நொடியும்
உழைப்பால் நிரப்பு;
அவ்வளவும் கிட்டும்
அகிலப் பரப்பு

காலம் வருமென்று
காத்திருக்குமா விடியல்?
ஞாலத்தில் செடிபோலத்தான்
நாளுமுயன்றால் முடியும்!

-அதிரை கவியன்பன்” கலாம்,

kalam shaick abdul kader

accountant

granite construction company

abudhabi uae

mobile 0508351499

News

Read Previous

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன்

Read Next

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்

Leave a Reply

Your email address will not be published.