தனிமை
தனிமை
“”””””””‘””””'”
கூடிவாழ்ந்த மனிதன்
குடிசையில் இருப்பினும்
மகிழ்ச்சியுடன்இருந்தது சூழ்ந்திருக்கும் உறவுகளின்
அரவணைப்பும் பாசமும் தான்
நிறைவும் குறைவும்
இன்பமும் துன்பமும்
வாழ்வில் இயற்கை தான்.
உள்ளார்ந்த உணர்வோடு
வாழ்க்கை பயணத்தை
நடந்தினால் இன்பம்தான்
தனிமை என்பது சிறைதான்
மனதை பலவீனபடுத்தும் தான்
இரும்பு திரை போட்ட
இருட்டு குகைதான்
முதுமையில் தனிமைதான்
முற்றிலும் கொடுமைதான்
அதிலும் நோயுற்றால்
துன்புறும் நிலையில்தான்
கொடுமையிலும் கொடுமைதான்
முதுமையில் தனிமையில்
துணையாய் இருப்பதே
வாழ்க்கை துணைதான்
உணர்ந்தால் மகிழ்ச்சிதான்
நல்ல புத்தகங்கள் படிப்பதும்
நகைச்சுவை உணர்வுடன்
தனிமையை வெல்வதும்
முதுமைக்கு நன்றுதான்
கவிதையும் கட்டுரையும்
கற்பனை சித்திரமும்
செவிக்கினிய பாடலும்
கவலையை மறந்து
தனிமையை வெல்லும்தான்
பேரக்குழந்தைகளின் மழலை
மொழிக்கேட்டால் முதுமையில்
தனிமை இனிமையாகும்தான்
சமுக நலன் காக்கும்
மனிதர்கள் தனிமையை
வென்ற அறிவு களஞ்சியம் தான்
தஞ்சை.ந.இராமதாசு
எழுத்தாளர்