தந்தையர் தின வாழ்த்துக்கள்

Vinkmag ad

தந்தைக்கு ஒரு  சிந்து.   

 
தனக்குள் இருந்த என்னைத் 
தாய் வழியாக இந்தத் 
தரணிக்குள் கொண்டுவந்த தந்தையே – உந்தன் 
தாள் பணியும் எந்தன் சிந்தையே !
 
மண்ணுலகில் நானந்த 
விண்ணளவு உயர்ந்திடவே 
எண்ணம் நிறைந்த என்  தந்தையே -உம்மை  
என்றும் மறவாது என் சிந்தையே. 
 
தான்பட்ட துன்பங்கள் 
நான்படக்கூடாதென்ற 
மேம்பட்ட எண்ணம் கொண்ட தந்தையே – உந்தன் 
மேன்மை மறவாது என் சிந்தையே .
 
கற்றுத் தெரிந்துலகில் 
உற்ற உயர்வடைய 
சற்றும் தளராதுழைத்த தந்தையே – உம்மை 
சற்றும் மறவாது என் சிந்தையே .
 
இறைவன் அளித்த பெரு 
வரமாக வந்த உம்மை 
கரங்கூப்பி வணங்கிடுவேன் தந்தையே – எந்தன் 
சிரந்தாழ்த்தி வணங்கிடுமென்  சிந்தையே.
அன்புடன், 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .  
17.06.2018 

News

Read Previous

புழுதி புயலை கிளப்பியவாறு வந்து நின்றது மஸ்தான் வீட்டு ஆடம்பரக்கார்!

Read Next

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *