கோடரிகள்

Vinkmag ad
கோடரிகள்.
===================================ருத்ரா
ஏன் இந்த கோபம் உனக்கு?
கிளைகளைக்கொண்டு
பேயாட்டம் ஆடுகிறாய்.
“நீங்கள் மரத்துக்கிடப்பது கண்டு
மனம் கொதித்த வெளிப்பாடு இது.
உங்கள் விலங்குகள்
உங்களுக்கே விளங்கவில்லை.
சுதந்திரம் என்று இதை
ஆண்டு தோறும் ஆர்ப்பரிக்கிறாய்.
உன் மண் உன் மனம்
உன் மொழி என்று எதுவும்
இங்கு மிச்சமில்லை.”
“சரி அதற்கு இப்போ என்ன?”
இந்த நாட்டின் பல்லாயிரக்கணக்கான‌
“ஆண்டுகளின் சரித்திரம் நீ.
உன் அடி மரத்தை வெட்ட‌
அவர்கள் கோடரி தூக்கி விட்டார்களே!
இந்த தங்கத்திருமண்ணை சுடுகாடு ஆக்கி
உன்னை எரித்து விடப்பார்க்கிறார்களே.
ஓட்டுப்போடு என்று
ஒரு மாயமானைக்காட்டுவார்கள்.
எந்திரத்துக்குள் ஒரு எந்திரம்
உன்னையெல்லாம் தின்று விடும்.
இன்னுமா நீ சீற்றம் கொள்ளவில்லை?
மரம் தன் இலைக்கணுக்களில் கூட‌
அவன் உயிரணுவில் இருந்த தமிழை
உலுக்கி உலுக்கி காட்டியது.
மரத்தின் குச்சியின் இலைக்கொத்துகள் கூட‌
தலைவிரித்த ஆவேசத்தில் ஒரு எச்சரிக்கையை
மரமே நிலத்தைப் பிடுங்கிக்கொண்டு வரும்
ஒரு ருத்ர தண்டவம் ஆடியது.
அவனோ
சரிதான்.இது சாமி குத்தம் என்று
கோடாங்கியை
அழைத்துவரப்போயிருக்கிறான்.
=========================================ருத்ரா

News

Read Previous

அடையாளம்

Read Next

சுதந்திர தின வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *