கொலுசு
துள்ளி உலாவரும் சுந்தரக் கால்களில்
வெள்ளிக் கொலுசுதரும் மெய்சிலிர்க்கு மோசைதான்
அள்ளி யுனைநான் அணைக்க விளிக்குதே
கள்ள மிலாப்பிள்ளை காண்.
கொலுசுதரும் சப்தம் கொலுபோல் குழந்தை
குலுக்கிவரும் பாரென்று கூறும்- இலக்கியம்
சொல்லுகின்ற தேரொன்றுச் சோர்வின்றி யோசையுடன்
மெல்லவரு மென்று விளம்பு
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
KALAM SHAICK ABDUL KADER
ACCOUNTANT
GRANITE CONSTRUCTION COMPANY
POST BOX 842
ABU DHABI UAE
Tags: கொலுசு