குருவுக்கு வணக்கம்

Vinkmag ad

குருவுக்கு வணக்கம் 

தடமறியா நிலையில் இருந்த என்னைத்  – தணலில் 
புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்க வைத்தாய் 
குடத்திலிருந்த விளக்காய் இருந்த என்னை – உயர் 
குன்றிலிட்ட விளக்காய் ஒளிரவைத்தாய் .
 
ஞ்ஞானமும்   இன்றி இருந்த என்னை 
விஞ்ஞானமும்  , உலக விஷய ஞானமும் – புனித 
மெய்ஞானமும் தந்து மனத்திருந்த 
அஞ்ஞானமும்அகற்றி அறிவு தந்தாய் .
 
ஏணியாய் இருந்தென்னை ஏற்றிவிட்டாய் 
தோணியாய் எனைக் கரை சேர்த்துவிட்டாய்     
ஞாநியாய் எனை நீ ஆக்கி வைத்தாய் – இந் 
நானிலம் தந்தாலும் ஈடாகுமா .
 
புவியெலாம் எனக்குப் புரிய வைத்தாய் – கற்றோர் 
அவையெலாம் என்னை அறிய வைத்தாய் 
சிவிகையில் என்னை அமர வைத்தாய் – கரம்  
குவித்து உன்னை தினம் வணங்கிடுவேன். 
 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
30.01.2015   

News

Read Previous

ஆசிரியர் தினம்

Read Next

ஆசிரியர் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *