ஆசிரியர் தினம்
தாய்மொழியின்மேல் காதல் தங்களால் துளிர்த்தது!
ஆங்கிலேயருக்கு அச்சமூட்டவே
ஆங்கிலம் கற்றுத்தந்தீர்கள்!
கடினமான கணிதத்தையும் கனிவாய்க் கற்றுக்கொடுத்தீர்கள்!
இயற்பியலையும் இயல்பாய்
இணைத்து எடுத்துரைத்தீர்கள்!
விஷமாய் இருந்த வேதியலும் உங்களால் வேதமாய் மாறியது!
தாவரங்கள்,விலங்குகளையும்
தோழனாய் விளக்கினீர்கள்!
சமூகஅறிவியல் மட்டுமல்லாது சமூகத்தைப்பற்றியும்
சொல்லித்தந்தீர்கள்!
வகுப்பறைப்பாடங்கள் மட்டுமல்லாது
வாழ்க்கை பாடமும் கற்றுத்தந்தீர்கள்!
மெழுகுவர்த்தியாய் ஒளிர்ந்து அறியாமைஇருள்போக்கி அறிவொளி தந்தீர்கள்!
ஏணிப்படிகளாய் ஏற்றிவிட்டு ஏற்றம் கண்டு இன்பம் கொண்டீர்கள்!
உங்களால் செதுக்கப்பட்டதால்
சிலையானோம்!
தலையெழுத்தை மாற்றி
எழுத்தறிவத்ததால் நீங்களும்
இறைவன் தான்!
குருவே சரணம்!
– அபிநயா,துபாய்.
ஆசிரியர் நாள் வாழ்த்துகள்
சிற்பி—–ஆசிரியர்
——————————
கல்லை உளியால் சிலையாக்கும் சிற்பியைப்போல்
பிள்ளையைக் கல்வி உளியால் செதுக்கித்தான்
நல்லவராய் வல்லவராய் மாற்றுகின்றார் ஆசிரியர்!
உள்ளத்தால் ஆசானைப் போற்று.
மதுரை பாபாராஜ்