ஆசிரியர் தினம்
ஆசிரியர் தினம்
அன்னை எனை ஈன்றெடுத்தாள்
தந்தை எனை படிக்க வைத்தார்
ஆசிரியர் தானே என்
அறிவுக்கண் திறந்து வைத்தார் .
அறிவுக்கண் திறந்து வைத்தார் .
தாய் மொழியைக் கற்றுத்தந்தார்
பிறமொழியும் தெரிய வைத்தார்
அறிவியலும் புவியியலும்
கணிதமும் கற்றுத்தந்தார்
ஆற்றலை வளர்த்திடவே
ஆயிரம் வழிகள் சொன்னார் .
மன வளம் தந்து என்னை
மனிதனாய் ஆக்கிவைத்தார்
ஒழுக்கமும் கற்றுத்தந்து
புனிதனாய் ஆக்கிவைத்தார் .
தேகப் பயிற்சி தந்தார்
தேச பக்தியும் வளர்த்தார்
சுற்றுப் புறச் சூழல்
சுத்தமும் கற்றுத் தந்தார்
எஞ்ஞானமும் இன்றி இருந்த என்னை
விஞ்ஞானமும் , உலக
விஷய ஞானமும் – புனித
விஷய ஞானமும் – புனித
மெய்ஞானமும் தந்து
அஞ்ஞானமும்அகற்றி வைத்தார் .
ஏணியாய் இருந்தென்னை
சிகரத்தில் ஏற்றிவிட்டார்
சிகரத்தில் ஏற்றிவிட்டார்
தோணியாய் அறியாமை
ஆற்றைக் கடக்க வைத்தார் .
ஆற்றைக் கடக்க வைத்தார் .
மா நிலம் போற்றுகின்ற
ஞாநியாய் ஆக்கி வைத்தார்
புவியெலாம் புரிய வைத்தார் – கற்றோர்
அவையெலாம் அறிய வைத்தார்
சிவிகையில் அமர வைத்தார் – கரம்
குவித்து நான் வணங்குகின்றேன் .
தடமறியாதிருந்த என்னைத் தணலில்
புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்க வைத்தார்
குடத்திலிருந்த விளக்காய் இருந்த என்னை – உயர்
குன்றிலிட்ட விளக்காய் ஒளிரவைத்தார் .
பள்ளி எனும் ஆலயத்தில்
கல்வி எனும் விளக்கேற்றி
அறியாமை இருளகற்றும்
ஆசிரியர் தெய்வமன்றோ .
விதையாய் இருக்கும் என்னை
விருட்சமாய் வளர வைக்கும்
விருட்சமாய் வளர வைக்கும்
குருவாக விளங்குவோரை
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் .
Tags: ஆசிரியர் தினம்