காகம் கரைந்த பொழுது

Vinkmag ad

காகம் கரைந்த பொழுது.
>
> ரோஷான் ஏ.ஜிப்ரி.
rozhanajifry@gmail.com

 
> முருங்கை போட்டு
> முறிக்காமல்
> என் தலையில் வந்து நின்று
> கத்து
> வயிற்றில் சுமந்த பாரத்தை
> இங்குதானே அவர்கள்
> இறக்கி வைக்கிறார்கள்
> நீ-கத்திக்
> கரைந்து,தெத்தித்
> திரிந்து
> ஆருடம் கூறுகிறாய்
> நான்-கவலையில் உறைந்து
> கண்ணீரில் கரைந்து
> வேறிடம் தேடுகிறேன்
>
> முந்தானை முடிச்சில்
> இருந்த
> நாலு பணத்தை முடிச்சி
> வைத்தவர்கள்
> அவர்களை ஏணியாய் ஆக்கி
> நான் தரிசு காணியாய்
> கிடக்கிறேன்
> இப்பவும் என்னில்
> அடிவைத்துதான்
> ஏறி மிதித்து மேலே
> ஏறுகிறார்கள்
>
> உனக்கென்ன பொல்லாவலாய்
> போனமுறையும் நீ
> தெத்தி,தெத்தி கத்திய
> அன்றுதான்
> குஞ்சி குரானோடு அவர்கள்
> வந்து
> பிஞ்சி,முத்தல் எல்லாம்
> பிச்சி
> என் பயிர் நிலம் மேய்ந்து
> ஆனை திண்ட சேனையாய் ஆக்கி
> அன்றாடம் காச்சியை
> தினம் திண்டாடும்
> பேச்சியாய்
> தெருவில் விட்டவர்களா
> திரும்பவும் என் திசையில்?
>
> வாழ்க்கைக்குள் போனபின்
> வாசலை பெருக்குகிறார்கள்
> வசதியை
> பெருக்குகிறார்கள்
> வீடு கிடக்கிறேன்
> பயன் அற்ற பாத்திரமாய்
>
> என் குருவிக் கூட்டு கனவை
> கொல்லைப் புறத்துக்கு
> தள்ளியது
> இந்த பிள்ளைப்
> பிரப்புகள்தான்
> கரைகிற உனக்கு தெரியுமா
> என் கவலை?

News

Read Previous

ஹைர உம்மத் இதழில் முதுகுளத்தூர்.காம்

Read Next

கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு “தினமலர்’ செய்தி எதிரொலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *