கவிதை என்பது

Vinkmag ad

உயிரின் மீது பதியும்

உயிரெழுத்து

மெய்யின் புலன்களை

மெய்யாகவே புலன்விசாரணை

செய்யும் மெய்யெழுத்து

நிராயுதபாணிகளான

நியாயவான்கட்கு

ஆயுதமாய்க் காக்கும்

ஆயுத எழுத்து

செய்யுளின் யாப்புத்தறியில்

பொய்யாமொழிப் புலவன்

நெய்து தந்த திருக்குறள்

மெய்”மை” தானே

சாயம் போகவில்லையே!!

அழிக்க முடியாத

உண்”மை” களால்

கிழிக்க முடியாத

எண்ணத்தாளில்

கூராக எழுதும்;

சமுத்திரமாய்ப் பொங்கும்

சமுதாயப் பிரளயங்களை

சிரட்டை அளவேனும்

சிரத்தையுடன் அள்ளித்

தடுக்கும்

 

 

 KALAM SHAICK ABDULKADER

News

Read Previous

நான்

Read Next

மெழுகின் விழுதுகள்

Leave a Reply

Your email address will not be published.