கவிதை என்பது
உயிரின் மீது பதியும்
உயிரெழுத்து
மெய்யின் புலன்களை
மெய்யாகவே புலன்விசாரணை
செய்யும் மெய்யெழுத்து
நிராயுதபாணிகளான
நியாயவான்கட்கு
ஆயுதமாய்க் காக்கும்
ஆயுத எழுத்து
செய்யுளின் யாப்புத்தறியில்
பொய்யாமொழிப் புலவன்
நெய்து தந்த திருக்குறள்
மெய்”மை” தானே
சாயம் போகவில்லையே!!
அழிக்க முடியாத
உண்”மை” களால்
கிழிக்க முடியாத
எண்ணத்தாளில்
கூராக எழுதும்;
சமுத்திரமாய்ப் பொங்கும்
சமுதாயப் பிரளயங்களை
சிரட்டை அளவேனும்
சிரத்தையுடன் அள்ளித்
தடுக்கும்
—
KALAM SHAICK ABDULKADER
Tags: கவிதை