கல்வி

Vinkmag ad
அலைகடல் போலவே
நிலையிலா வாழ்விது
விலையிலாப் பேர்தரும்
கலைபொருள் கல்வியே!
அறம்பொருள் இன்பமும்
திறமுடன் ஈட்டலாம்
மறைபொருள் விளங்கலாம்
நெறிதரும் கல்வியால்!
திரைகடல் ஓடியும்
திரவியம் தேடலாம்
நரைவரும் காலமும்
கரையிலாக் கல்வியே!

— அதிரை கவியன்பன் கலாம்,

News

Read Previous

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .

Read Next

வத்திக்கான் வானொலியின் 80ஆண்டு சேவை

Leave a Reply

Your email address will not be published.