கண்ணீர் அழுக்கு கழுவப்படாது !

Vinkmag ad
கண்ணீர் அழுக்கு கழுவப்படாது !
(பி. எம். கமால், கடையநல்லூர்)
சுதந்திர நாட்டுக்குச்
சொந்தம் கொண்டாடும்
காங்கிரசுக் கட்சியின்
கனதனவான்களே !
அந்தப் போரில்
சிந்தியது எங்கள்
சிவப்பு ரத்தமும்தான் !
அது நீங்கள்
வெற்றிலை போட்டுத்
துப்பிய சாறல்ல !
அது எங்கள்
குருதியும் வியர்வையும்
கூட்டணி அமைத்து
வெள்ளை இருட்டை
விரட்டிய சரித்திரம் !
தேர்தல் வந்தால்
மட்டும் எங்களை
ஆதரிப்ப  துபோல்
ஆசை காட்டுவீர் !
ஆட்சிக்  கட்டிலில்
அமர்ந்து விட்டாலோ
காட்சியை மாற்றிக்
காறித் துப்புவீர் !
முஸ்லிம்களுக்காய்
முழுதாய் நீங்கள்
செய்தது என்ன ?
செய்வது என்ன ?
அன்னியப் பொருட்களை
அள்ளி எடுத்து
அக்கினிக் குண்டம்
அமைத்தார் காந்தி !
நீங்களோ
அன்னியப் பொருட்களை
விற்பனை செய்ய
உழவர் நிலங்களை
உருக்குலை த்தீர்கள் !
காவிப் படைகள்
பள்ளியை உடைக்கக்
காவல் செய்து
கடமை ஆற்றி
முதலைக் கண்ணீர்
வடித்தழு  தீர்கள்  !
காவிகள் எங்கள்
நெஞ்சில் குத்தும்
நஞ்சு மனத்தார் !
நீங்களோ
எங்கள்
முதுகில் குத்தும்
மூர்க்க குணத்தார் !
நீங்கள்
ஆட்சி செய்யும்
அவலத்தால்  தான்
மோடிக் களைகள்
முளைத்  தெழுகின்றன !
அதோ –
தேர்தல் தாம்பாளம்
தயாராகி விட்டது !
ஆட்சியை மோடிக்கு
அள்ளிக் கொடுங்கள் !
வெளியே நீங்கள்
வேறுபட்டாலும்
உள்ளுக்குள் கூட்டு
உண்டென்று எங்களுக்குத்
தெரியும் ; எங்களை
ஏமாற்ற வேண்டாம் !
செருப்பாண்ட நாற்காலியில்
நெருப்பாண்டால் என்ன ?
நீராண்டால் என்ன ?
முஸ்லிம்களின்
கண்ணீர் அழுக்கு
கழுவப்படாது !

News

Read Previous

மொட்டான காதல் மலருமா ?

Read Next

நீங்களும் ஆகலாம் இளம் சி.இ.ஓ.,!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *