கண்ணின் மணியே………
கண்ணின் மணியே..கண்மணியே…
களைப்பாற கண் அயர்ந்தயோ..
கனவுகளோடு கண் அயர்ந்தாயோ….
கவலையற்று வாழ்ந்தாயோ..
வஞ்சகத்தின் வீழ்ச்சியால் வீழ்ந்தாயே..
எறிதழலில் எறிந்து மாய்ந்தாயோ…
தண்ணீர் தண்ணீர் என்று கேட்கும் உன் சத்தம்….
மூன்று நாட்கள் கடந்தாலும்
மீண்டும் மீண்டும் ஒலிக்கிறதடி வெள்ளந்தியே….
தண்ணீர் கேட்கும் தவிப்பை எண்ணி எண்ணி
இங்கு மிச்சமாகிறது கண்ணீர் மட்டும் தானடி…