கடல் குமுறி சீறினாலும் …!

Vinkmag ad

கடல்குமுறிசீறினாலும் …!

 

அன்புக்கவிகீரனூர் A.S. ஹபீபுர்ரஹ்மான்

 

 

இன்று நம் நாட்டில் மதவாதம் பயமுறுத்த

இருக்கின்ற மக்களெல்லாம் நடுநடுங்க!!

கொல்லும் புகழ் மதசக்தி பேய்களெல்லாம்

கொலைக் களத்தில் சிறுபான்மை மக்களை வீழ்த்த வேண்டி…

 

ஆயுதத்தை கையிலேந்தி அணி வகுத்தால்

அழிவு செயல்கள் நம் நாட்டினிலே மிகுந்திடாதோ?

நம் நாட்டை ஆளவந்தோர் கவனத்திற்கு…

நம் ஆட்சிதான் – என்றே மக்கள் கூற வேண்டும்!

 

மதங்களின் மேல் கனிவும் வேண்டும்! நீதி வேண்டும்!!

மக்களின் மேல் – பரிவும் வேண்டும்! பாசமும் வேண்டும்!

மலையெதிர்த்து – கடல் குமுறிச் சீறினாலும்

மாறாத மதச்சார்பற்ற தன்மை வேண்டும்!

 

உரம் பெற்ற இக்கொள்கையிலே – பிடிப்பு வேண்டும்!

ஓட்டளித்த மக்களின் இடர் தீர்க்க வேண்டும்!

தலை மக்கள், எதிர்க்கட்சி, புலவோர் இன்னும்…

தகை சான்றோர் கருத்தெல்லாம் மதிக்க வேண்டும்!

 

 

இன்மொழியும், நல் உள்ளமும் ஆட்சி செய்தால்…?

இழி செயலாம் மதச் சண்டைகளுக்கு இடமே இல்லை!!!

செப்புகின்ற பொய் மொழிகள் நிலைப்பதில்லை!

செழிப்புமிகு மதச்சார்பற்ற ஆட்சி தோற்பதில்லை!!!

 

மண்ணுலகில் அமைதி நிலை நாட்ட வேண்டில்

மன்னரெல்லாம் அல்குர்ஆனைப் புரிய வேண்டும்!

இங்குண்டு வேற்றுமைகள் என்றிட்டாலும், இனிய ஒற்றுமையை

ஆட்சி புரிவோரும் தான் வளர்க்க வேண்டும்!!!

 

நன்றி :

நர்கிஸ்

செப்டம்பர் 2014

News

Read Previous

சமயோசித அறிவு வேண்டும் !

Read Next

பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்த ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published.