கடந்து போகும் வாழ்வு
காட்டாற்று
வெள்ளம் போல்
கரை கடந்து
பாய்கிறது வாழ்வு.
ஆயிரம் கண்கள்
பார்த்துக் கொண்டே
இருப்பது அறிந்தும்
நான் காணப்படாதவளாகவே
உணர்கிறேன்.
சுற்றிச்சுற்றி சுற்றம்
இருந்தும்
இழுத்துப் பூட்டிய
என் சிறைக்கதவுகள்
மூடிய வண்ணமே
இருப்பதேன்?
என வியக்கிறேன்!
கூட்டுப்புழு கூட்டுக்குள்
அடைபட்டு
இருக்கும்
எனக்கு
என்று சிறகுகள்
முளைக்கும்?
காலம் வந்து
இருந்தவரை
அள்ளிக்கொண்டு
போகிறது
வெள்ளத்தில்
புரண்டு கொண்டு
அபய கரம் தோன்றுமா?
என வானைப்பார்க்கும்
அபலை போல்
உணர்கிறேன்.
காட்டாற்று
வெள்ளம் போல்
கரைகடந்து போகிறது
வாழ்வு.