ஓர் இரவில் ஓர் உறவில்..
தேனெடுக்க வண்டுவரும்
தென்றலிடம் தூதுவிடும்
பால்கண்டு பசியெடுக்கும்
பழம்நழுவிப் பாலில்விழும்
மெல்லிதழில் நாணம்வரும்
மேனியெங்கும் பூமணக்கும்
மெல்லிடையில் கைதவழும்
மல்லிகைக்கும் மயக்கம்வரும்
சொல்லெடுக்க வாயசையும்
சொல்லாமல் கண்ணசையும்
அள்ளிக்கொள்ள ஆசைவரும்
அடுத்தடுத்து ஓசைவரும்
எதுவரைக்கும் இன்பம்வரும்
என்றுமனக் கேள்வியெழும்
அதுவரைக்கும் போவதற்குள்
அவசரத்தில் பகலும் வரும்!!
மு.இரவிச்சந்திரன்
—
கவிஞர் காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052
Tags: இரவு