ஓர் இரவில் ஓர் உறவில்..

Vinkmag ad

தேனெடுக்க வண்டுவரும்

தென்றலிடம் தூதுவிடும்

பால்கண்டு பசியெடுக்கும்

பழம்நழுவிப் பாலில்விழும்

 

மெல்லிதழில் நாணம்வரும்

மேனியெங்கும் பூமணக்கும்

மெல்லிடையில் கைதவழும்

மல்லிகைக்கும் மயக்கம்வரும்

 

சொல்லெடுக்க வாயசையும்

சொல்லாமல் கண்ணசையும்

அள்ளிக்கொள்ள ஆசைவரும்

அடுத்தடுத்து ஓசைவரும்

 

எதுவரைக்கும் இன்பம்வரும்

என்றுமனக் கேள்வியெழும்

அதுவரைக்கும் போவதற்குள்

அவசரத்தில் பகலும் வரும்!!

 

மு.இரவிச்சந்திரன்

கவிஞர் காவிரிமைந்தன்

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்

பம்மல்,  சென்னை 600 075

தற்போது – அபுதாபி – அமீரகம்

00971 50 2519693

00971 50 4497052

kaviri2015@gmail.com

www.thamizhnadhi.com

News

Read Previous

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Read Next

கண்ணதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *