ஓட்டு

Vinkmag ad

ஓட்டு

====================================ருத்ரா

உன் நிறம் என்ன?

உன் திறம் என்ன?

அதர்மத்தை வெட்டும்போது

நீ

கூர்மழுங்கிப் போகிறாய்.

தர்மத்தை நிலை நாட்ட‌

வந்தேன் என்கிறாய்.

நிலை தடுமாறி நிற்கிறாய்.

நீதியை நிறுவ‌

வந்தேன் என்கிறாய்.

பார்.

இங்கே தராசு தட்டுகளே

களவு போய்விட்டனவே.

யானையை

தடவிப்பார்த்தவர்களைப் போலவே

நாங்களும் உன்னைத்

தடவிப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உன் முகம் எங்கே?

உன் கண்கள் எங்கே?

எங்கள் விழியின்றி

உந்தன் விழி தேடுகிறோம்.

நீ தட்டுப்படுவாய் என்று

கைகளை

காற்றில் அளைகின்றோம்.

நீ கனவா? இல்லை நனவா?

தெரியவில்லை.

இருந்தாலும்

போடுகிறோம்.போடுகிறோம்.

உன்னைப் போட்டுக்கொண்டே இருக்கிறோம்.

போட்டுப் போட்டுக்

குவித்துக்கொண்டேயிருக்கிறோம்.

ஏன்? எதற்கு? எங்கே? எனும்

கேள்விகளே இங்கு மிச்சம்.

News

Read Previous

கடுகு துவையல்

Read Next

கைப்பேசியும் களவுபோன நாட்களும்………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *