ஏன் ?
கேள்வி அல்ல;
வேள்வி
அறிவுச்சுரங்கங்களின்
அற்புதத் திறவுகோல்
அறிவியல் குழந்தைகள்
அவதரிக்க வைக்கும்
உயிரணு
கண்டுபிடிப்புகளின்
கண்டுபிடிப்பு
சூத்திரங்களின்
சூட்சமம்
ஞானிக்கள் என்னும்
தேனீக்கள் சேமித்த
மகரந்தப் பொடி
தேடலின் துவக்கம்
முடிவேயில்லாத் தேடல்
பிறப்பையும்
இறப்பையும்
புரிய வைக்கும்
ஞான ஒளி
புத்தியைக் கூராக்கும்
ஞான உளி
அறியாமை இருள் விலக்கும்
பகுத்தறிவுப் பகலவன்
“நான் பிறந்த காரணத்தை
நானே அறியு முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய்
செல்வ மகனே?”
விடையறியா வினாவோடு
புவியினை விட்டும்
விடைபெற்றுச் சென்றார்
கவியரசர் கனாவோடு
” அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி,
Tags: ஏன்