எந்திரன்
எந்திரன்
கட்டை விரல் அசைவில்
காரியங்கள் புரிகின்ற
கைகால்கள் இயந்திரத்தால்
ஆனவன் தான் எந்திரனோ ?
மூளையேதும் இல்லாமல்
மூலை முடுக்கெல்லாம்
ஆணியதைச் சுமந்து
அலைபவன் தான் எந்திரனோ ?
நான் நினைத்துப் பார்க்கின்றேன்
நலமிழந்து தவிக்கின்றேன்
நன்று தீது அறியாத
இரும்பல்ல எந்திரன் தான் !
தன்னைச் சுமந்த ஒரு
தாய் பெருமை அறியாத
எம்மகனும் எந்நாளும்
இரும்பிதய எந்திரன் தான் !
நால்வர்க்கு உதவாதான்
நல இதயம் இல்லாதான்
நரம்பு சதை இருந்தாலும்
நடை பிணம் தான் எந்திரன் தான் !
உதவாத வாழ்க்கை
ஊர் சுற்றும் வேட்கை
இதுதான் உயர்ந்ததென
எண்ணுபவன் எந்திரன் தான் !
ஊர் என்றும் உறவென்றும்
ஒரு நாளும் எண்ணாமல்
ஒண்டிக் குடித்தனமாய்
உழல்பவனும் எந்திரன் தான் !
தனக்கென்றும் வாழாமல்
பிறர்க்கென்றும் வாழாமல்
தான்தோன்றித் தனமாக
வாழ்பவனும் எந்திரன் தான் !
சுந்தரக் கவியிதனில்
சூடுபட உரைக்கின்றேன்
பதந்தருமோர் வழ்வற்றோன்
பயனில்லா எந்திரன் தான் !
மதன்.சு
சேலம்.
ecemadhan94@gmail.com