எந்திரன்

Vinkmag ad

எந்திரன்

கட்டை விரல் அசைவில்

காரியங்கள் புரிகின்ற

கைகால்கள் இயந்திரத்தால்

ஆனவன் தான் எந்திரனோ ?

 

மூளையேதும் இல்லாமல்

மூலை முடுக்கெல்லாம்

ஆணியதைச் சுமந்து

அலைபவன் தான் எந்திரனோ ?

 

நான் நினைத்துப் பார்க்கின்றேன்

நலமிழந்து தவிக்கின்றேன்

நன்று தீது அறியாத

இரும்பல்ல எந்திரன் தான் !

 

தன்னைச் சுமந்த ஒரு

தாய் பெருமை அறியாத

எம்மகனும் எந்நாளும்

இரும்பிதய எந்திரன் தான் !

 

 

நால்வர்க்கு உதவாதான்

நல இதயம் இல்லாதான்

நரம்பு சதை இருந்தாலும்

நடை பிணம் தான் எந்திரன் தான் !

 

உதவாத வாழ்க்கை

ஊர் சுற்றும் வேட்கை

இதுதான் உயர்ந்ததென

எண்ணுபவன் எந்திரன் தான் !

 

ஊர் என்றும் உறவென்றும்

ஒரு நாளும் எண்ணாமல்

ஒண்டிக் குடித்தனமாய்

உழல்பவனும் எந்திரன் தான் !

 

தனக்கென்றும் வாழாமல்

பிறர்க்கென்றும் வாழாமல்

தான்தோன்றித் தனமாக

வாழ்பவனும் எந்திரன் தான் !

 

சுந்தரக்  கவியிதனில்

சூடுபட உரைக்கின்றேன்

பதந்தருமோர் வழ்வற்றோன்

பயனில்லா எந்திரன் தான் !

மதன்.சு

சேலம்.

ecemadhan94@gmail.com

News

Read Previous

ஏன் ?

Read Next

மணமகள் தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *