எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

Vinkmag ad
 

http://mrishanshareef.blogspot.ae/2013/10/blog-post.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+blogspot/OkDys+(%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)

 

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

Posted: 09 Oct 2013 04:23 AM PDT

மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்
நீவியழித்திடவியலா
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்
நீயொரு மண்பொம்மை
உனது கண் பூச்சி
செவி நத்தை
கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்
உன்னிடமும் வேம்பிடமும்
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன
திசைகளின் காற்று
விருட்சத்துக்குள் சுழல்கிறது
தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை
ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென
தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம்
கதை பகர்கிறாள் மூதாட்டி
வேப்பமரத்தடி வீடெனத் தன் வீட்டிற்கேவோர்
அடையாளம் தந்திருக்கும் மரத்தை
வெட்டியகற்ற மறுக்கிறாள் கிழவியென
மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை
சமையலறை ஜன்னல் காற்று
உன்னிடம் சேர்க்கிறது
மனித ஓசைகள் கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
நத்தைகளால் அடைத்துக் கொள்கிறாய் – பிறகும்
கண்களை மூடும் பூச்சிகள் தாண்டி
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்கிறாய்
– எம்.ரிஷான் ஷெரீப்



News

Read Previous

சகோதரர் அப்பாஸ் ஷாஜஹான் நினைவு கட்டுரைப் போட்டி – 2013 அறிவிப்பு

Read Next

தமிழ் விக்கி்ப்பீடியா – கேள்விகள் – விடைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *