சகோதரர் அப்பாஸ் ஷாஜஹான் நினைவு கட்டுரைப் போட்டி – 2013 அறிவிப்பு

Vinkmag ad
தமிழ் அறிந்த பள்ளி மாணவர்களிடையே எழுத்துத் திறனையும் சிந்தனைத் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் ரியாத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து நடத்துகிற கட்டுரைப் போட்டி விவரம்:
கீழ்க் காண்கிற  தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் (200 வரிகளுக்குள்) தமிழில் கட்டுரை எழுதி நவம்பர் 07, 2013 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பவேண்டிய முகவரி:rtskavithaipotti2013@gmail.com  

தலைப்புகள்:
  • மனிதநேயம் : மனம் தேடும் மணம்
  •  வருங்காலம் வளமே தரட்டும்
  •  வெற்றி காத்திருக்கிறது!
  •  புவிவெப்பமயம்: புலப்படும் தீர்வுகள்
விதிமுறைகள்:
                       1). கட்டுரையாளர் பள்ளி மாணவர் என்பதை உறுதிப்படுத்தும் ஏதேனுமொரு நடப்புச் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும்
                       2). இயன்ற அளவு பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுத வேண்டும்
                       3). தானே சொந்தமாக எழுதியது என்றும், வேறெதையும் தழுவி எழுதப்பட்டதன்று என்றும் உறுதிமொழி அளிக்க வேண்டும். (சார்பில் எழுதப்படும் (Proxy) ஆக்கங்களைத் தவிர்க்க, எழுதியவற்றிலிருந்து குறுக்குக் கேள்விகள் எழுப்பி உறுதி செய்யப்படும்)
                       4). குறிப்பு உதவி (Reference) நூல்களை, ஏதேனும் இருந்தால், குறிப்பிடுவது நலம்
                       5). நவம்பர் 7 2013 ம் நாள் இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
                       6). மின்னஞ்சல் வடிவிலோ, அல்லது ரியாத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள்  மூலமோ நவம்பர் 7, 2013க்குள் கட்டுரைப் போட்டிக் குழுவினருக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்கலாம்
                       7). இப்போட்டியில் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது.

தமிழ் அறிந்த பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் இக்கட்டுரைப் போட்டியின்துணை நெறியாளராக சகோ. முஹம்மது ஷெரீஃப்  செயலாற்றுவார்.
நன்றி.
பிரியமுடன்

Mohammedsheriff
IIS.RIYADH.
0509195698

News

Read Previous

சென்னையின் வரலாறு

Read Next

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *