என் உயிர் பருகுவாய்
என் உயிர் பருகுவாய்
============================== ====ருத்ரா
வருடைச்சிறு கால்
வறுமண் நடப்ப
பொறி பூத்தன்ன மேனி
பொறிகளும் உதிர்ப்ப
நெடுஞ்சுரம் பட்டாங்கு
உயிர் நீர் பருக
துடித்தனை அந்தோ.
இது காண் என் உயிர்
பருகுவாய் மீள்வாய்.
உயிர்கள் கலக்கும்
அஃது அனைத்தே காதல்.
அடுத்தொரு பிறப்பில்
யான் நீயாகி நீ யானாகும்.
அது ஊழ் மட்டும் அன்று
அடுத்து ஊரும்
ஊழ் ஊழ் தொறும்
நம் கதழ்பரிக்கலி மா
காதலும் அதன்கண் ஊரும்.