எதிர்நீச்சல்
ஊன்றி எழுந்து நடந்திடவே
…ஓடித் தவழ்ந்துக் கடந்திடவே
தோன்றும் உணர்வால் முயன்றிடவே
….தோல்வி அறியா எழுச்சியாமே!
பாடம் படிக்கும் போதினிலும்
….பாரில் வெல்லும் போட்டிகளும்
ஓடம் போல தேடுதலும்
….ஓயா உழைப்பின் நீச்சலாமே!
ஆடை, உணவு தேடித்தான்
….ஆளாய்ப் பறப்போம் ஓடித்தான்
கோடை, குளிரும் பாராமல்
….கொள்வோம் எதிராய் நீந்தித்தான்!..
ஆடை, உணவு தேடித்தான்
….ஆளாய்ப் பறப்போம் ஓடித்தான்
கோடை, குளிரும் பாராமல்
….கொள்வோம் எதிராய் நீந்தித்தான்!..
–அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
Tags: எதிர்நீச்சல்