உலக பெற்றோர் தினம்
உலக பெற்றோர் தினம்.
பிறந்த உயிர்க்கெல்லாம் பெற்றோர் உண்டு, பெற்றோர் இன்றிப் பிறந்தவரில்லை.
பெற்றோர், பெற்றோர் மட்டுமல்ல ,
பெயரைக் கொடுத்தோர், உயிராய் வளர்த்தோர், உரிய வயதினிலே
உரியன செய்தோர் ,
உற்ற வகையில்
உயர்ந்திடச் செய்தோர், சுமையாய் நினையாது, சுமந்து மகிழ்ந்தோர்,
தம் பசி பாராது
நம் பசி தீர்த்தோர்,
உலகம் புகழ்ந்தால் உள்ளம் மகிழ்வோர்,
ஊரார் பழித்தால்
உள்ளம் கலங்குவோர், ஆதரவளிக்கஆரிருப்பினும்
அவர்கள் இல்லையேல்
நாம் அனாதை தானே.
நம் பெற்றோரின் சிரமமும் பெருமையும்,
நாம் பெற்றோரானபின் தானே புரியும்.
பெற்ற கடனை அவர்கள் தீர்த்தார்,
பிள்ளைக்கடனை நாம் தீர்த்திடுவோம். வாழும்நாள்வரை அவர்கள் வருந்தாமல் ,
நாளும் அவர்களை வணங்கிக் காப்போம்.
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
1.6.2021.
Tags: உலக பெற்றோர் தினம்