உலக தந்தையர் தினம்
உலக தந்தையர் தினம்
உன்னிலிருந்து என்னை
உலகத்தில் உதிக்கவைத்தாய் .
உன்னுதிரம் என்பதனால்
உன் பெயரே எனது
முதற்பெயராய் ஆனதன்றோ !.
கருத்தில் என்னை சுமந்து
கருத்தாய் எனை வளர்த்தாய்.
சுமைதாங்கி போல என்
சுமைகளை நீ தாங்கிசுகங்களை எனக்களித்தாய்
கரம் பிடித்து நடக்க வைத்தாய்தோள் சுமந்து சிரிக்க வைத்தாய் .
கேட்டதை வாங்கித்தந்தாய்கெட்டதை விலக்கச் சொன்னாய் .
அறிவு பெறுக வைத்தாய் .
அகிலம் புரிய வைத்தாய்
சான்றாக வாழ்ந்து -என்னை
‘சான்றோனாக்கி வைத்தாய்.
பாசத்தை வெளிக்காட்டாது
பாசாங்குகள் செய்யாது
நேசமுடன் என் தேவைகளை
நிறைவேற்றி நெகிழவைத்தாய் .
கஷ்டம் தெரியாமல் நான் வளர
கஷ்டங்கள் பல தாங்கி -என்
இஷ்டங்கள் பூர்த்தி செய்தாய்
கண்கலங்காது நான் வாழ
எண்ணற்ற தியாகம் செய்தாய் – நீ
கண் கலங்கிப் பார்த்ததில்லை .
கண்ணீரை அடக்கிவைத்தாய்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு- எனக்கு
உன்நன்றி கொன்றால் உய்வில்லை.
பெற்ற கடன் நீ தீர்த்தாய் – உன்னை
இறுதிவரை பாதுகாத்து
பிள்ளைக்கடன் நான் தீர்ப்பேன் . .எந்தையே , தந்தையே , விந்தையே ,
உனை மறவாதென் சிந்தையே .
அன்புடன்சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
21.06.2020.