உலகமே உணரட்டும்!
உலகமே உணரட்டும்!
மொழிகளுக்கு எல்லாம் தலை மொழி!
பிறந்தநாள் அறியாத் தமிழ் மொழி!
சங்கம் வளர்த்த நல்மொழி!
செம்மொழியாம் எங்கள் தாய்மொழி!
ஆட்சிமொழியாய்த் தமிழ்மொழி இல்லை!
நீதிமன்றங்களில் தமிழ் மொழி இல்லை!
கல்விச்சாலையில் தமிழ்மொழிஇல்லை!
சொல்லும்பொருளும் தமிழிலா இல்லை?
வணிகப்பலகையில் தமிழ்மொழி இல்லை!
குழந்தைப் பெயர்களில் தமிழ்மொழி இல்லை!
வழிபாட்டில் நிலையாய்த் தமிழ் மொழி இல்லை!
இலக்கிய இலக்கண வளமா இல்லை?
தமிழில் படிக்க ஆர்வம் இல்லை!
தமிழ்ப் படித்தோர்க்கு வேலை இல்லை!
படித்தவரிடத்தில் தமிழ்மொழி இல்லை!
புகழும் சிறப்பும் தமிழுக்கா இல்லை?
சொல்லும் செயலும் ஒன்றிட வேண்டும்!
செந்தமிழை உயிராய்க் காத்திட வேண்டும்!
உயர்தமிழ் எங்கும் ஓங்கிட வேண்டும்!
உணர்வாய்த் தமிழை மதித்திட வேண்டும்!
தமிழின் சிறப்பை அறிந்திட வேண்டும்!
உலகம் முழுவதும் உணர்ந்திட வேண்டும்!
இந்தியா உணர்வாய் மகிழ்ந்திட வேண்டும்!
அரியணையில் தமிழ்மொழி ஏறிட வேண்டும்!
முகவரி:
முனைவர் சு, பாஸ்கர்
1908,பெரியார் நகர்,(பூக்கொல்லை)
ரெட்டிபாளையம் சாலை,
ஈஸ்வரி நகர்,
தஞ்சாவூர் (மாவட்டம் ),
அ. கு. எண் -613004.
அலைபேசி எண்: 6383442011.