உறக்கம் என்றால் கேவலமா ?

Vinkmag ad

உறக்கம் என்றால் கேவலமா ?

உனது தூக்கம் சிதறியதால்

உலகம் தூங்கக் கூடாதா ?

எனது தூக்கம் கெடுத்ததினால்

என்ன பயனை நீர்பெற்றீர் ?

மனது முழுதும் துயர்க்காடு !

மனித வாழ்வு பெரும்பாடு !

தினமும் மாறும் வாழ்வினிலே

திறமை மட்டும் போதாது !

உலகம் முழுதும் பார்ப்போமால்

உண்மை வாழ்வு புரிந்துவிடும் !

நிலவும் உலகில் அமைதியில்லை !

நிறைய உழைத்தும் பயனில்லை !

அலையும் வாழ்வில் தூக்கமில்லை !

ஆழ்ந்துப் படித்தால் வேலையில்லை !

எளிதாய் வாழ்ந்து மகிழ்வடைய

எதற்குத் தேவை சுறுசுறுப்பு ?

வாழும் உலகில் காண்பதெல்லாம்

வாழும் மனிதர் மேற்தோற்றம் !

பாழும் நோயில் வீழ்பவரில்

பலத்தைக் காட்டும் வீரனுண்டு !

சூழும் வறுமை நிலைக்கோட்டில்

துடிக்கும் மேதை பலருண்டு !

தாழும் நிலைமை அடைந்தவரில்

தரத்தால் சிறந்த மனிதருண்டு !

நாட்டில் ஆளும் அமைச்சர்கள்

நன்றாய்த் தூங்கி வாழ்கின்றர் !

காட்டில் வாழும் விலங்கினமும்

கவலை யின்றி தூங்குதப்பா !

கூட்டில் வாழும் கிளிகூட

குழந்தைப் போல வாழுதப்பா !

வீட்டில் வாழும் எந்நிலைமை …

விடியும் முன்பே சுப்ரபாதம் ….

உறக்கம் என்றால் கேவலமா ?

உரசிப் பார்ப்பீர் நின்தலையை !

பிறக்கும் குழந்தை தூங்கிவிட்டால்

பெரிதாய் மகிழ்வீர் முகம்விரிய !

மறக்கும் நினைவை உடையவரே !

மறந்துப் போச்சா நின்தூக்கம் ?

அரக்கன் போல மாறிடுவீர் !

அயர்ந்து நானோ தூங்கிவிட்டால்.

உருத்திடும் கண்கள் சிவந்திட

உருவமோ எலும்பாய் மாறிட

வருத்திடும் வலியில் துடித்திட

வாவென நோயை அழைக்கவா ?

மருத்துவ மனைக்குச் செல்லவா ?

மாத்திரை நின்போல் உண்ணவா ?

கருத்துடன் கேளும் யோசனை !

காலையில் என்போல் தூங்குவீர் !

 

                                               – திரு சமரசம்

News

Read Previous

நமது_முன்னோர்களின்_விஞ்ஞான_அறிவு

Read Next

ஐங்கோண வடிவில் ஆரஞ்சு பழங்கள்

Leave a Reply

Your email address will not be published.