உயிர் காற்று பெறவே…
மைசூர் இரா.கர்ணன்
தமிழ் திறமைக்கு விருதுகள்
தலைப்பு :
உயிர் காற்று பெறவே
பயிர் செய்வோம் மரமே
கவிதை
முல்லை வளம் காக்கும் நாடு
இல்லை இடர் என்ற நிலை
எங்கும் காணும் உண்மை ஒன்றே
பங்கம் இல்லா கணிப்பின் விடை.
இயற்கை வளம் நிறைந்த மருதம்
என்றும் சுகம் தந்திடும் தென்றல்,
சிதைக்க நினைக்கும் எட்டுவழி எல்லாம்
அழிக்க நினைத்ததே ஆயிரம் மரங்களை.
பொதிகை மலை பொன் தென்றல்
குறிஞ்சி பேறைக் காக்கும் நன்றாம்,
மலை அழிக்க நினைக்கும் மனங்கள்
மரம் காக்க மறப்ப தேனோ..?
நீரும் காற்றும் ஈக்கள் புள்ளும்
நிலத்தில் விதைக்கும் மரங்கள் போதும்,
நீவீர் வாழ இழுக்கும் காற்றை
நிலவேர் மரங்கள் தந்திடும் கொடையாய்.
அறிவில் ஆறு ஆனநல் மனிதா..!
செறிவில் மரங்கள் செழித்திட வைத்தால்
முறிவாய் ஆகி முடியுமா வாழ்க்கை..?
நெறியது வாழ நினைத்திடு மரத்தை.
மைசூர் இரா.கர்ணன்
21 .06 .2021