ஈமானிலே ………

Vinkmag ad

அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை
           ஐவேளை தொழுவதற்கு வாருங்களே
இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக
         இரண்டரை சதவீதம் வழங்குங்களே
பொல்லாத பாவங்கள் கரைந்தோடவே- இந்தப்
        புனிதரமலானில் நோன்பை நோற்பீர்களே
கல்லான உள்ளங்கள் கசிந்திடுமே – அந்தக்
        கஃபாவில் ஹஜ்ஜை செய்வீர்களே
சொல்லாலும் செயலாலும் ஒன்றான – நமது
        சுந்தரநபி வழியே நன்றானது
வல்லான் வகுத்திட்ட குர்-ஆனிலே – நல்ல
        வலிமை ஊட்டும் ஈமானிலே
 
 
அறபுத்தமிழ்ச் சொற்கட்கான பதவுரை:
 
    முஃமீன் = நம்பிக்கையாளர்
    
— ஸக்காத் = 2.5% ஏழைவரியாக தன்னிருப்பிலிருந்து வருடந்தோறும் வழங்க வேண்டிய தர்மம்
  
  கஃபா        =  முதலோனின் (உலகில் நிறுவப்பட்ட) முதலாலயம்
 
  ஹஜ்        =  ஆயுளில் ஒரு முறையாவது மக்காச் சென்று நடாத்தப்பட வேண்டிய வழிப்பாட்டிற்கானப் புனிதப் பயணம்
 
 குர்-ஆன்  = இறைவனின் இறுதி வேதம்
 
  ஈமான் = நம்பிக்கை
 
 
இயற்றியோன்:”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

News

Read Previous

சென்றுவா ரமலானே

Read Next

அரும் ம‌ல‌ர் வாச‌ வாழ்த்துக்க‌ள்!

Leave a Reply

Your email address will not be published.