இறைவனையே எண்ணவைத்தார் !
இறைவனையே எண்ணவைத்தார் !
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் )
இசைபாடி எமையெல்லாம்
இறைவனையே எண்ணவைத்தார்
அசையாத மனத்தையெல்லாம்
அவர்பாடி அசையவைத்தார்
தனியான குரல்வளத்தால்
தரணியிலே உயரநின்றார்
தரமாகத் தமிழ்பாடி
உரமானார் தமிழிசையில்
நாகூரில் பிறந்தகுரல்
நாடெங்கும் ஒலித்ததுவே
கூவுகின்ற குயில்கூட
நாகூரை நினைக்கிறதே
நாகூரின் நாயகனே
நீயெங்கே போய்விட்டாய்
நாடுள்ளோர் உன்பாட்டால்
நாளுமுனை தேடுகிறார்
காசுக்காய் பாடாது
கடவுளுக்காய் பாடிநின்றாய்
தேசமெலாம் இப்போது
தேடுதையா உன்முகத்தை !
Tags: இறைவன்