இந்த கல்வி முறை
“இந்த கல்வி முறை”
இது கற்ற பின்
இழந்தோம் பல
இயற்கை வளங்களை
போரட்ட குணங்களையும்.
பொருள் ஈட்டினோம்
மாதம் சம்பள
அடிமையாய்
இது இக் கல்வியின்
பெருமைய இல்லை
காலனித்துவத்தின்
பரிமாணம்.
பன்னாட்டு கம்பெனியின்
பண்பட்ட அடிமையாய்
வளர்கிறோம் நம்
தாய் மண்ணில்
இயற்கையோடு விதைத்து
வளர வேண்டிய நாம்
கார்பொரேட் கம்பெனியின்
மரபணு மாற்றப்பட்ட
விதையாய் வளர்கிறோம்
சிந்தனை என்னும்
நீர் ஊற்றி வளர
வேண்டும்
இங்கு எல்லாம்
கேளிக்கை பிறர்
குறை கண்டு மகிழ்து
வாழ்கிறோம்.
வாழ்வு இப்படி
நகற எல்லாம்
மூன்றாம் உலகின்
எழுதப்பட்ட ஏகாதிபத்திய
ஏடுகளாக மாறி உள்ளது
நமது நிலை. !!!
–நூர் முகம்மது–