இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு… கண்ணீர் அஞ்சலி !

Vinkmag ad

மறைந்த மாமேதை, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி

அறிவியல் அறிஞர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு…

அஞ்சலி ! அஞ்சலி ! கண்ணீர் அஞ்சலி !

 

தமிழ்மாமணி. கவிஞர் ஹாஜி மு.ஹிதாயத்துல்லாஹ்.

இளையான்குடி

அலைபேசி : 99763 72229

 

அன்பின் பெருந்தகையே !

கண்ணிய ரமலான்தான்

கடந்து போனது !

நீங்களுமா …?

 

நதிதான்

நடந்து போகும் என்றால் …

நீங்கள் நடந்ததெங்கே ..?

எங்களைக்

கடந்து போன தெங்கே ..?

 

மலர்களிலே … மல்லிகை

மனிதர்களிலே … நீங்கள்

மாமனிதர் !

மதம், இனம், நிறம் கடந்து

எல்லோரையும்

நேசித்த … நீங்கள்

எல்லோராலும்

நேசிக்கப்பட்டவர் !

 

அன்று,

மாணவர்களுக்கு

நேர்வழி காட்டத்தானே …

பயணித்தீர்கள் !

நீங்கள்

திரும்பி வரும் முன்னே

மரணம் முந்திக்கொண்டு

உங்களைத் தன்சீமைக்கு

அழைத்துப் போய் விட்டதே …!

 

செய்தியறிந்து

சோகத்தில் … நனைந்தது

இந்தியா !

சுற்றம் அழ, சொந்தம் அழ

நட்பும் அழ ..

பாசப்பறவையே … நீ

பறந்த தெங்கே …?

 

எண்பத்தி நான்கு வயது

இளைஞனே !

நரைத்தாலும் .. காதலித்தாயே

தாயகத்தை !

 

இந்தியாவை உயர்த்த

கனவு கண்ட

புதுயுகச் சிற்பியே !

 

எங்கள்

கடலோரக் கவிதையே …!

உங்களை வாசிக்கும்போதே

மரணம் உங்களை

யாசித்துக் கொண்டுபோய் விட்டதே !

 

வறுமையிலும்

செம்மையைக் கடைப்பிடித்த

மாணவர் !

 

வாழ்க்கையில்

எளிமையை நேர்மையை கற்பித்த

ஆசான் ! ஆசிரியர் !

 

தோல்வியிலும்

பாடம் உண்டெனச்

சொல்லிவிட்டுப் போன ..

வழிகாட்டி … நீங்கள் !

 

மாணவப் பருவத்திலேயே …

உயரவேண்டும் என்று

கனவு கண்ட நீங்கள்

விஞ்ஞானியானதும்

இந்தியாவின்

முதல் செயற்கைக்கோளின்

தந்தையானீர்கள் !

தமிழகம் தந்த …

இந்திய விஞ்ஞானியே !

உலக விஞ்ஞானிகள்

திரும்பிப் பார்த்த .. அதிசயமே !

அற்புதமே !

 

உங்களைத் திரும்பவும் பார்க்க

ஆசைப்படுகிறோம் ! – அது

இயலாது என்பதினால்

உங்களின் ‘ஆன்மா’ அமைதிபெற

இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் !

 

News

Read Previous

செஞ்சித் தூண்கள்

Read Next

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *