இணையத் துடிக்கும் கரம்
மயக்கி விட்ட மன்னவனே
தயக்கம் கொண்டு நான் இருக்கையில்
மயங்கி விட்ட நீயோ
தயங்கி இருப்பதும் ஏனோ==?
விருப்புக் காட்டிய நீயோ
வெறுப்புக் காட்டினால்
வெறுப்புக் காட்டிய நான்
விருப்பம் கூறுவது எப்படி..?
அடுக்கு மொழி பேசிய நீ
இடைவெளி விட்டு இருந்தால்
இடைவெளி விட்டு நடந்த நான்
அன்பு மொழி பேசுவது எப்படி..??
ஆசையைத் தூண்டி விட்ட நீ
நிராசையாக அமர்ந்து இருந்தால்
நிராசையை வரவேற்ற நான்
ஆசையைக் கூறுவது எப்படி..??
சாதனையா இது சோதனையா
சோதனையில் வரும் சாதனையா
வெற்றியோடு வரும் வேதனையா
வேதனையோடு வரும் வெற்றியா
நம் காதல் அறியாத புரியாத
புதிராய் நீ இருக்கையில்..!!!!
ஆர் எஸ் கலா
இலங்கை