ஆருக்கும் வாய்பதில்லை !

Vinkmag ad
 
 
          image1.PNG
 
 
 
 
 
                        ஆருக்கும் வாய்பதில்லை !
 
    (    எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )
 
 

காரிருக்கு வீடிருக்கு கையினிலும்  பணமிருக்கு
     பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு
     என்றாலும் மனத்தளவில் என்னவோ குறையிருக்கு
     எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு !
 
    முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா
    தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா
    ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்
    யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா !
 
   பிறந்தநாள் வருவதனை பெரும்பாலும் விரும்பவில்லை
   குறைந்தநாள் ஆகிடுமோ எனுமேக்கம் வந்துநிற்கும்
   பட்சணங்கள் செய்தாலும் பசிகூட வருவதில்லை 
   இஷ்டமுடன் அதைச்சுவைக்க இனிப்புநோய் விடுவதில்லை !
 
   பிள்ளைகளோ அவர்பாட்டில் பேரர்களோ விளையாட்டில்
   மருமக்கள் எமைக்கண்டால் மெளனமாய் சிரித்திடுவார்
   எமையொத்த வயதுடையார் இயலாமை காரணத்தால்
   ஏங்கித் தவிப்பதனை இன்ரநெற்றில் பார்த்துநிற்போம் !
 
   காலையில் எழுவதற்குக் காரணமும் தெரிவதில்லை
   மாலைவந்து விட்டதென மணிக்கூடு காட்டிநிற்கும் 
   பாயிலே எமக்குமுன்னே நோய்வந்து படுத்துவிடும்
   பதறிநாம் துடித்தாலும் பார்த்தபடி சிரித்துநிற்கும் !
 
   கலைநிகழ்ச்சி கல்யாணம் காண்பதற்குச் சென்றாலும்
   பலபேரும் எம்பக்கம் பார்த்திடவே மாட்டார்கள் 
   சிலவேளை பார்த்தாலும் திரும்பாமல் சென்றிடுவார் 
   அதுவே எம்மனநிலையை அடியோடு மாற்றிவிடும் !
 
  முதுமைபற்றி நினைத்துவிட்டால் 
  முகங்கூட மாறிவிடும்
  எதுவுமே எங்களுக்கு 
  எதிரியாய்தான் தெரியும் 
   உடல்தளர்ந்து போனாலும்
   உளம்தளர்ந்து போகாமல் 
   உளம்நிறைய மகிழ்ச்சிதனை
   ஊற்றெடுக்கச் செய்திடுவோம் !
 
    எமையொதுக்கி நிற்பவரும்
    இந்நிலைக்கு வந்திடுவார்
     இலையுதிர்வு நிலையதனை
     இயற்கையே கொடுத்திருக்கு 
     தலைநரைக்கும் பல்லுவிழும்
     தளர்வுவந்து தாக்கிவிடும் 
     அதைத்தவிர்த்து வாழ்ந்துவிடல்
     ஆருக்கும் வாய்ப்பதில்லை !
 
 
 

News

Read Previous

கண்டிடுவோம் தமிழ்ப்பணியை !

Read Next

உடல் வலி தீர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *